|
| சத்தீஸ்கர் : 478 வாக்காளர்கள் ; 510 வாக்குகள் பதிவு |
| ராய்பூர் (ஏஜென்சி), 22 நவம்பர் 2008 ( 12:15 IST ) | |
சத்தீஸ்கரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலின்போது, 478 வாக்காளர்களை மட்டுமே கொண்ட ஒரு வாக்குச் சாவடியில் 510 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.
ராய்பூர் மாவட்டம் அப்னாபூர் தொகுதிக்குட்பட்ட மானிக்சவுரி என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த 176 ம் எண் கொண்ட வாக்குச் சாவடியில் 100 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பது அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அந்த வாக்குச் சாவடிக்கு ஒதுக்கப்பட்ட மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 478 தான்.ஆனால் வாக்குப் பதிவு முடிவடைந்த பின்னர் பதிவான வாக்கு சதவீதத்தை பார்க்கும்போதுதான் 510 வாக்குகள் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த முறைகேட்டிற்கு துணை போன குற்றச்சாட்டின் பேரில் அந்த குறிப்பிட்ட வாக்குச் சாவடியில் பணியிலிருந்த 4 தேர்தல் பணியாளர்களையும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.அத்துடன் அந்த வாக்குச் சாவடியில் மறு தேர்தல் நடத்தவும் மாவட்ட தேர்தல் அதிகாரி பரிந்துரைத்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|