|
| பெட்ரோல் விலை குறைப்பு : நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 18:19 IST ) | |
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தை, தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
அப்போது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை மத்திய அரசு குறைக்க நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவது குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 50 அமெரிக்க டாலர் என்பதற்கும் குறைந்துவிட்ட நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை மத்திய அரசு திரும்பப் பெறுவதுதான் நியாயம் என்று சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாயுடு தெரிவித்தார்.
இதே கோரிக்கையை பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்தி வருவதால் இடதுசாரிகளுடன் இவையும் இணைந்து மக்களவையில் பெட்ரோல், டீசல் பிரச்சனையை எழுப்பத் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|