|
| சத்தீஸ்கரில் 56 தேர்தல் அதிகார்கள் இடைநீக்கம் |
| கோர்பா (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 15:58 IST ) | |
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று 51 தொகுதிகளில் இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் பணியில் அலட்சியமாக இருந்ததாக 56 தேர்தல் அதிகாரிகள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோர்பா மாவட்டத்திற்குட்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்குப் பதிவுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டிய கிரேடு 1, 2 மற்றும் 3 ஆவது பிரிவுகளைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் 56 பேர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்லாமல் பணியில் அலட்சியம் காட்டியதாக மாவட்ட தேர்தல் அதிகாரியால் பணி இடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வாக்குப் பதிவுக்கு தேவையான வாக்குப் பதிவு எந்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்காமலும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளுக்கு செல்லாமலும் அலட்சியமாக இருந்ததால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|