|
| சோமாலியா கடற்கொள்ளையர் கப்பல் மூழ்கடிப்பு
|
| புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 19 நவம்பர் 2008 ( 12:12 IST ) | |
நடுக்கடலில் கப்பல்களை தாக்கி, கொள்ளையடித்து வரும் சோமாலியா கடற்கொள்ளையர்களின் கப்பலை இந்திய கடற்படையினர் தாக்கி மூழ்கடித்துள்ளனர்.
வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் சோமாலியா நாட்டில் ஏராளமான கடற்கொள்ளையர்கள் உருவாகியுள்ளனர். இவர்கள், அந்நாட்டு கடல் பகுதி வழியாக செல்லும் பிறநாட்டு கப்பல்களை நடுக்கடலில் வழி மறித்து தாக்கி, கொள்ளையடித்து வந்தனர்.
கடந்த வாரம் இந்தியா மற்றும் சவுதி அரேபியாவுக்கு சொந்தமான 2 கப்பல்களை சோமாலியா கடற்கொள்ளையர்கள் நடுக்கடலில் மடக்கி, கடத்த முயன்றனர்.
எனினும், இந்திய கடற்படையினர் எதில் தாக்குதல் நடத்தி அவர்களிடமிருந்து கப்பல்களை மீட்டனர்.
இந்நிலையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். தபார்' என்ற கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சோமாலிய கடற்கொள்ளையர்கள் இந்திய கப்பலை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
இதை தொடர்ந்து, இந்திய கடற்படையினர் கடுமையான எதிர் தாக்குதல் நடத்தினர். இதில் சோமாலியா கடல் கொள்ளையர்களின் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|