|
| வி.எச்.பி க்கு தடைவிதித்தால் கடும் விளைவு ஏற்படும் : பா.ஜ. |
| போபால் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008 ( 16:48 IST ) | |
விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். க்கு தடை விதித்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என மத்திய அரசை பா.ஜனதா எச்சரித்துள்ளது.
போபாலில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்த அக்கட்சியின் முன்னாள் தலைவர் வெங்கையாநாயுடு, மேற்கூறிய இயக்கங்களை தடை செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராக இருக்க வேண்டும் என்றார்.
தற்போது காங்கிரஸ் கட்சி நெருப்புடன் விளையாடிக் கொண்டிருக்கிறது.அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.
எவ்வித ஆதாரம் இல்லாமலேயே தேசிய ( சங் பரிவார் ) இயக்கங்களை காங்கிரஸ் கட்சி களங்கப்படுத்துகிறது.
மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்படுபவர்களை பற்றி மகாராஷ்ட்ரா ஏடிஎஸ்( தீவிரவாத தடுப்பு பிரிவு ) 'ரன்னிங் கமாண்டரி' கொடுக்கிறது.காங்கிரஸ் கட்சி அதனை தேர்தலில் பயன்படுத்திக் கொள்கிறது.
தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான்.அவன் இந்துவா அல்லது முஸ்லீமா என்று பார்ப்பது முட்டாள்தனமானது என்று நாயுடு மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|