யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
எல்லையில் இந்திய வீரர் சுட்டுக்கொலை!
ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 17 நவம்பர் 2008   ( 13:17 IST )
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 2 வீரர்கள் மாயமாகினர்.

ஜம்முவிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள பெரி வனப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவ வீரர்களுக்கு கடந்த 5 தினங்களுக்கு முன்பு தகவல் வந்தது.

இதையடுத்து, தீவிரவாதிகளை பிடிப்பதற்காக ராணுவ வீரர்கள் வனப்பகுதியில் நுழைந்தனர். கடந்த 5 தினங்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பூஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்களுக்கும், அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளுக்கும் இடையே பயங்கரத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில், ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மேலும் 2 வீரர்களை காணவில்லை.

இதையடுத்து, அந்த பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவத்தினர் தீவிரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாலேகாவ் : ராணுவ அதிகாரி மீது மேலும் ஒரு வழக்கு
காஷ்மீர்: வாக்குப் பதிவு துவங்கியது!
ஜம்முவில் நாளை முதல் கட்டத் தேர்தல்
கரையைக் கடந்தது கைமுக் புயல்
நீதிமன்றத்தில் ராஜ் தாக்கரே சரண் ; கைது
பெண் சாமியார் கைது 'தேர்தல் தந்திரம்' : பா.ஜனதா
செய்திகள்
தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது....
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
பாலா படத்தில் கார்த்தி!
'நான் கடவுள்' படம் முடிந்து இன்னும் திரைக்கு வராத நிலையில், ஸீ தொலைக்காட்சி தயாரிக்கும் புதிய படத்துக்கு பாலா ஒப்பந்தமாகியுள்ளார். பாலாவின்...
நடிக்கிறார் முரளி கிருஷ்ணா!
கோவையில் அனில் அம்பானியின் நவீன திரையரங்கம்!
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...