|
| வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடம் |
| புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 நவம்பர் 2008 ( 13:42 IST ) | |
பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறையில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கடந்த 2006 அக்டோபர் மாதத்திலிருந்து 2008 ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்ற வீட்டு வன்முறை தொடர்பான வழக்குகள் டெல்லியில்தான் மிக அதிகமாக பதிவாகியுள்ளது.
3,534 வழக்குகளுடன் டெல்லி முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து கேரளா 3,287, மகாராஷ்ட்ரா 2,751 வழக்குகளுடன் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
ஆந்திராவில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2008 அக்டோபர் வரை 1,625 வழக்குகள் பதிவாகியுள்ளன.
பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறை தடுப்புச் சட்டம் அமலான பின்னர் இரண்டு ஆண்டுகளில் மேற்கூறிய வழக்குகள் பதிவாகியிருப்பதாக பெண்களுக்கான தேசிய ஆணையத்தைச் சேர்ந்த கிரிஜா வியாஸ் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|