|
| அஸ்ஸாம்: எல்லைத் தாண்டிய தீவிரவாதமே காரணம்! |
| கவுகாத்தி (ஏஜென்சி), 3 நவம்பர் 2008 ( 10:16 IST ) | |
அஸ்ஸாம் தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு எல்லை தாண்டிய தீவிரவாதமே காரணம் என்று முதல்வர் தருண் கோகாய் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தி மற்றும் பல மாவட்டங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 81 பேர் பலியாகினர். 400க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் தருண் கோகாய் நிருபர்களிடம் கூறியதாவது:
அஸ்ஸாமில், மக்களை மத ரீதியாக பிளவுபடுத்த விரும்பும் சக்திகள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.
இந்த குண்டு வெடிப்புகளுக்கு எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாதமே காரணம் என்பது தெரியவந்துள்ளது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்த சக்திகள் செயல்பட்டுள்ளன.
அதனை அடையாளம் காண மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|