|
| குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மீது நடவடிக்கை: மன்மோகன் |
| கவுகாத்தி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2008 ( 11:51 IST ) | |
அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 81 பேர் பலியாகினர். பலத்த காயம் அடைந்த 400க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் நேற்று பாதிக்ப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் கூறுகையில், "அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தில் வேறு நாடுகள் ஏதாவது சம்பந்தப்பட்டு இருக்கிறதா என்பதை பற்றி தீவிரமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|