|
| கலவரம் வெடித்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் : பா.ஜ. |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 7 அக்டோபர் 2008 ( 13:00 IST ) | |
கர்நாடகம் மற்றும் ஒரிஸ்ஸா போன்ற மதக் கலவரம் நடந்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு சமூக- அரசியல் மற்றும் பொருளாதார காரணங்கள்தான் இத்தகைய கலவரங்களுக்கு காரணம் என்றும், இது விஷயத்தில் மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் கண்டனம் தெரிவிக்கும் போக்கை கடைபிடிப்பதாகவும் கூறினார்.
மதமாற்றம் பிரச்சனை தொடர்பாக விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய வெங்கையா நாயுடு, " எனக்கு மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால் மதமாற்றத்தை தடை செய்வேன் " என மகாத்மா காந்தி கூறியதை சுட்டிக்காட்ட விரும்புவதாக தெரிவித்தார்.
மதமாற்றம் தடை சட்டம் அமலில் உள்ள ஐந்து மாநிலங்களில் ஒன்றான ஒரிஸ்ஸாவிலேயே மதக்கலவரத்தை தடுக்க முடியவில்லையே எனக் கேட்டபோது, அதற்கான காரணங்கள் மிகவும் ஆழ்மானவை என்றும், இது குறித்து இரு மதத்தினருக்குமிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் பதிலளித்தார் வெங்கையா நாயுடு.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|