|
| ரசாயன தொழிற்சாலையில் தீ: 10 பெண்கள் உடல் கருகி சாவு |
| புனே (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 16:04 IST ) | |
புனேவில் ரசாயான ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
புனேவிலிருந்து 30 கி.மீ. தொலைவிலுள்ள போஸாரி என்ற இடத்தில் 'சாய் கெமிக்கல்ஸ்' என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது. இங்கு, ராணுவ வெடிமருந்து சாலைகளுக்காக 'பாம் கவர்' தயாரிக்கப்பட்டு வந்தது.
நேற்றிரவு சுமார் 30 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. ரசாயனப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதில் அந்த தொழிற்சாலை முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இதில், 4 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். பாதுகாப்புக்காக கழிவறைக்குள் பதுங்கிய 6 பெண் தொழிலாளர்கள் மூச்சுத் திணறி பலியாகினர்.
பலத்த காயமடைந்த 9 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|