|
| ஜம்முவில் ராணுவம் பதிலடி : 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 28 ஆகஸ்டு 2008 ( 12:05 IST ) | |
ஜம்முவில் ராணுவத்துடன் நடந்த 16 மணி நேர மோதலில், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் உள்ள மிஷ்ரிவாலா என்ற இடத்தில், நேற்று காலை போலீஸ் சீருடை அணிந்த 3 தீவிரவாதிகள், ராணுவ சோதனைச் சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலியாகினர்.
பின்னர், ஓர் வீட்டுக்குள் புகுந்த தீவிரவாதிகள் வீட்டில் இருந்த 6 பேரை பிணையக் கைதிகளாக பிடித்தனர்.
இதையடுத்து, அந்த வீட்டை சுற்றிவளைத்த ராணுவம் பிணைக்கைதிகளை மீட்க கடுமையாக போராடியது. நேற்று காலை சுமார் 8 மணிக்கு ஆரம்பித்த இந்த போராட்டம் நள்ளிரவு 12 மணிவரை நீடித்தது.
சுமார் 16 மணி நேரம் நடந்த இந்த சண்டையின் முடிவில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த 3 தீவிரவாதிகலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்த ஒரு பெண் மற்றும் 3 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
மேலும் 2 பிணைக்கைதிகள் நிலை என்ன என்பது குறித்து தகவல் இல்லை. அந்த பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|