|
| ஸ்ரீநகர்- முஷாபராபாத் பஸ் போக்குவரத்து துவங்கியது! |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 21 ஆகஸ்டு 2008 ( 12:37 IST ) | |
அமர்நாத் கோயில் நில விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டத்தினால், கடந்தவாரம் நிறுத்தப்பட்ட ஸ்ரீநகர்-முஷாபராபாத் பேரூந்து போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான நல்லெண்ண நடவடிக்கையாக ஸ்ரீநகர்- முஷாபராபாத் இடையே பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது.
இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி முயற்சி மற்றும் நட்புறவுக்கு அடையாளமாக இந்த போக்குவரத்து இயங்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், அமர்நாத் நில விவகார தொடர்பாக, கடந்த சில வாரங்களாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கலவரம், வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த வாரம் எல்லைப் பகுதியில் நடந்த கலவரம் காரணமாக, இந்த பேரூந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தற்போது ஓரளவு பதற்றம் குறைந்துள்ள நிலையில்,பேரூந்து போக்குவரத்து இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.
மாதமிருமுறை என்ற கால அட்டவணைப்படி, வரும் 28 ம் தேதியும் இந்த பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|