|
| அமர்நாத் போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்: பா.ஜ. |
| ஐதராபாத் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 19:08 IST ) | |
அமர்நாத் கோயில் வாரியத்திற்கு 100 ஏக்கர் நிலத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்தி நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை தமது கட்சி தீவிரப்படுத்தப்போவதாக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,மேலும் கூறியதாவது :
நாடு முழுவதும் எல்லா மாவட்டங்களின் தலை நகரங்களிலும் நாளை முதல் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப்படும்.
ஜம்மு- காஷ்மீரில் தற்போது நிலவும் பதற்றமான சூழலுக்கு ஆளும் காங்கிரஸ் கட்சிதான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரஸ் மற்றம் அதன் கூட்டணிக் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றால் தூண்டி விடப்படும் ஜம்மு- காஷ்மீர் பிரச்சனை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடைப்பட்டதோ அல்லது ஜம்முவிற்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கும் இடைப்பட்டதோ அல்ல.
ஜம்மு- காஷ்மீருக்குத் தன்னாட்சி வழங்குவது தொடர்பாக ஜவஹர்லால் நேரு கொண்டிருந்த கொள்கைதான்,ஜம்மு- காஷ்மீர் பிரச்சனைக்கு மூல காரணம்.
அமர்நாத் கோயில் வாரியத்திற்கு நிலம் வழங்குவதைத் தடுத்துப் பாகிஸ்தான் கொடிகளை ஏந்திப் போராடி வரும் பிரிவினைவாதிகளுக்கு எதிராக நீதி கேட்டுப் போராடும் அனைவரும் தேசியவாதிகள் மட்டுமின்றி நாட்டுப் பற்றாளர்களாவர்.
மத்திய அரசு தனது குறைந்த கால அரசியல் ஆதாயத்திற்காகவும்,வாக்கு வங்கி அரசியலிற்காகவும் பிரிவினைவாதிகளிடம் சரணடைந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|