|
| இடதுசாரிகள் மீது கசப்புணர்வு இல்லை : பிரணாப் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 13:25 IST ) | |
ஐ.மு.கூட்டணியுடனான உறவை முறித்துக் கொண்டதற்காக இடதுசாரிகள் மீது கசப்புணர்வு இல்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
தனியார் தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்த அவர், அதே சமயம் நடந்து முடிந்த நிகழ்வுகள் தமக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.
கடந்த 4 ஆண்டு காலமாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் ஒன்றாக செயல்பட்டோம்.
எங்களுக்கிடையே கடுமையான விரோத உணர்வு ஏதுமில்லை, இன்னும் வெளிப்படையாக கூறவேண்டுமானால் இடதுசாரி தலைவர்கள் மீது எனக்கு கசப்புணர்வு ஏதுமில்லை.அதேபோன்று இடதுசாரி தலைவர்களும் தனிப்பட்ட முறையில் என்னை தாக்கிப் பேசவில்லை.
அடுத்த தேர்தலுக்கு பின்னர் இடதுசாரிகளுடன் இணைந்து காங்கிரஸ் செயல்படுமா என்று கேட்கப்படுகிறது.அது குறித்து இப்போதே எப்படி என்னால் கூறமுடியும் ? சூழ்நிலைகள் எப்படி ஏற்படுமோ? பொறுத்திருந்து பார்ப்போம்.வாய்ப்புகளை திறந்தும் வைக்கவில்லை; மூடவும் இல்லை என அந்த பேட்டியில் பிரணாப் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|