|
| ஐ.மு.கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிக்க எஸ்.ஏ.டி. முடிவு |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008 ( 17:52 IST ) | |
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக வாக்களிப்பது என சிரோமணி அகாலி தள கட்சி முடிவு செய்துள்ளது.
மக்களவையில் வரும் 22-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், அதில் தமது நிலைப்பாடு குறித்து சிரோமணி அகாலி தள கட்சி நிர்வாகிகள் இன்று சண்டிகரில் ஆலோசனை நடத்தினர்.
அதில், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த்ததை எதிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்தார்.
சிரோமணி அகாலி தள கட்சியிடம் 8 மக்களவை உறுப்பினர்கள் உள்ளனர்.
இதனிடையே, இரண்டு மக்களவை உறுப்பினர்களைக் கொண்டுள்ள தேசிய மாநாட்டுக் கட்சியின் இறுதி முடிவை, அதன் தலைவர் உமர் அப்துல்லாவே மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|