|
| சாலை விபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி பலி |
| கண்ணூர் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008 ( 17:37 IST ) | |
கேரள மாநிலம் கண்ணூர் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர் பலியானார்.
பெங்களூர் இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானி பி.எம்.அரவிந்தாக்ஷன்.
இவர் கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள பையனூர் அருகில் வேலூர் என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் ஆட்டோ ஒன்றில் சென்று கொண்டிருந்தார்.அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து ஒன்று ஆட்டோ மீது மோதியது.
இந்த விபத்தில் விஞ்ஞானி அரவிந்தாக்ஷன் நிகழ்விடத்திலேயே பலியானார். அவரின் மனைவி பீனா படுகாயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மகன் அர்ஜூன் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவுமின்றி தப்பித்தான்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|