|
| கல்விக் கடனுக்கு உத்தரவாதம்: மத்திய அரசு பரிசீலனை |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008 ( 10:49 IST ) | |
உயர் கல்வி பயில வங்கிக்கடன் பெறும் மாணவர்களுக்கு அரசே உத்தரவாதம் அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் கூறினார்.
இதுகுறித்து, தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு (அசோசெம்) அமைப்பு சார்பில் டெல்லியில் நடந்த கல்விக் கண்காட்சியில் கலந்துக்கொண்டு அவர் பேசியதாவது:
உயிர் கல்விக்காக மாணவர்கள் வங்கியில் கடன் பெற அரசே உத்தரவாதம் வழங்கினால் பெற்றோர்களுக்கு சிரமம் குறையும் என்று அசோசெம் அமைப்பு யோசனை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
நமது தற்போதைய கல்வி முறையால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்று கூறுவது தவறு. இந்த கல்வி முறையில் பயின்றவர்கள் இன்று விண்வெளி தொழிற்நுட்பத்தில் சாதனை படைக்கும் விஞ்ஞானிகளாக மாறியுள்ளனர்.
பல்கலைக் கழகங்களின் கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும். பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிப் பணிகள் மேம்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|