|
| திபெத் : சீனாவுக்கு அத்வானி வலியுறுத்தல் |
| ஐதராபாத்(ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 16:21 IST ) | |
திபெத் பிரச்சனைக்கு தீர்வு காண தலாய் லாமாவுடன் சீனா மீண்டும் பேச்சு வார்த்தையை துவக்க வேண்டும் என பா.ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி வலியுறுத்தியுள்ளார்.
ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், திபெத் விவகாரம் தொடர்பாக சீனா - இந்தியா இடையேயான உறவில் பிரச்சனை ஏற்படுவதாக கூறினார்.
சீனாவை தன்னுடைய மிகப்பெரிய எதிரியாக இந்தியா எண்ண தேவையில்லை.ஆனால் நாட்டின் பாதுகாப்புக்கு உள்ள அச்சுறுத்தல்களை உணர்ந்து , தனது பாதுகாப்பை இந்தியா பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எல்லை தாண்டிய தீவிரவாத பிரச்சனைக்கு தீர்வு கண்டால்தான் , அண்டை நாடுகளுடனான உறவை இந்தியாவால் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
மத்தியில் ஆட்சியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது.சாமான்ய மக்களை அது ஏமாற்றி விட்டது.
ஒவ்வொரு வாரமும் பண வீக்கம் அதிகரித்து வருகிறது என அத்வானி மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|