|
| பிரச்சனைகளை பேசி தீர்க்க தயார்: பிரதமர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 6 மே 2008 ( 08:54 IST ) | |
அணுசக்தி ஒப்பந்தம் உள்பட எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசி தீர்க்க மத்திய அரசு தயாராகவே இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:
"நாட்டு நலனை கருத்தில்கொண்டே அணுசக்தி ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக இடதுசாரிகள் உள்பட எங்களது கூட்டணியில் உள்ள கட்சியினர் எழுப்பும் எந்தப் பிரச்சனை குறித்தும் விவாதித்து தீர்வு காண மத்திய அரசு தயாராக உள்ளது.
பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் பலன் விரைவில் தெரியவரும்.
விலைவாசி உயர்வு என்பது உலகளாவிய பிரச்சனை. அமெரிக்க அதிபர் புஷ், இந்தியர்கள் பற்றி சொன்னது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய- இமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|