|
| வங்கி பரிமாற்ற வரி நீக்கப்படும் : மத்திய அரசு அறிவிப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 18:49 IST ) | |
வங்கிகளில் பண பரிமாற்றத்திற்கு விதிக்கப்படும் பண பரிமாற்ற வரி நீக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் குறுக்கிட்டு பேசுகையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது :
கறுப்பு பணத்தை தடுக்க அரசு மாற்று வழிகளை கடைப்பிடிக்கும். இந்த வருட இறுதியில் வங்கிகளில் வசூலிக்கப்படும் பண பரிமாற்ற வரி ரத்து செய்யப்படும்.
கறுப்பு பணத்தை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் தான் பணபரிமாற்ற வரி விதிக்கப்பட்டது.
புதிதாக அறிமுகப்படுத்த உள்ள சட்ட விரோத பண பரிமாற்ற சட்டத்தில், கணக்கில் வராத பணத்தை கையாள்பவர்களை பிடிக்க தேவையான வழிமுறைகள் இருக்கும்.
பண பரிமாற்ற வரி பிடித்தம் செய்வதால், பொதுமக்களுக்கு பாதிப்பு இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை.
இந்த வரி ரொக்கமாக பணம் எடுத்தால் மட்டுமே பிடித்தம் செய்யப்படுகிறது. காசோலை போன்றவைகளுக்கு வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|