|
| விலைவாசி உயர்வு : மத்திய அரசிற்கு எச்சரிக்கை |
| கோல்கத்தா(ஏஜென்சி), புதன்கிழமை, 30 ஏப்ரல் 2008 ( 12:00 IST ) | |
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக கட்டுப்படுத்த தவறினால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும் என்று மதிய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கோல்கத்தாவில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அக்கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத், கூறியதாவது :
விலைவாசியைக் குறைக்க மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக் கொள்ள நிர்பந்திப்போம்.விலை உயர்வைக் கட்டுப்படுத்த 5 அல்லது 6 வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம்.இதனை செயல்படுத்தவில்லையெனில் எதிர்காலத் திட்டம் என்ன என்பதை முடிவு செய்வோம் என்று கூறினார்.
விலையைக் கட்டுப்படுத்துவதில் அரசு தோல்வியடைந்துவிட்டது. எனவே இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளைக் கைவிட்டு, கொள்கையை மாற்றிவிட்டு உறுதியான முடிவுகளை எடுக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|