யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தினமும் ஒரு கற்பழிப்பு : தலைகுனியும் தலைநகரம்
புதுடெல்லி (ஏஜென்சி), 29 ஏப்ரல் 2008   ( 16:29 IST )
நாளொன்றுக்கு ஒரு கற்பழிப்பு சம்பவம் நிகழ்வது, தலைநகர் புதுடெல்லியை தலைகுனியச் செய்ய வைத்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும், டெல்லி நகரின் பல்வேறு பகுதிகளிலும் மொத்தம் 330 கற்பழிப்பு மற்றும் பாலியல் கொடுமைகள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன.

மொத்தம் 121 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில், பாலியல் கொடுமைகள் தொடர்பான 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் மட்டும் 8 சிறுமிகள் உள்பட 14 பெண்கள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இது, டெல்லி போலீஸ் கமிஷ்னர் ஒய்.எஸ்.தத்வாலுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுக்கான பாராளுமன்றக் குழு நோட்டீஸ் அனுப்புவதற்கு தூண்டுகோலாய் அமைந்துள்ளது.

அதில், அண்மைக்காலமாக பதிவாகிவரும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், '90 சதவிகித கற்பழிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்துள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர், பாதிக்கப்பட்டோருக்கு முன்கூட்டியே தெரிந்த நபர்களாகவே இருக்கிறார்கள்' என்றார்.

கடந்த ஆண்டு பதிவாகியுள்ள 581 கற்பழிப்பு வழக்குகளில், பாதிக்கப்பட்டோருக்குத் தெரிந்த, அவர்களுடன் நன்றாக பழகியிருந்தவர்கள் 98.28 சதவிகிதத்தினராவர்.

டெல்லி நகரில் கடந்த 2005-ல் 658 கற்பழிப்பு வழக்குகள் பதிவாயின; அதே ஆண்டில் 762 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. 2006-ல் 713 பாலியல் கொடுமை தொடர்பான வழக்குகள் பதிவாயின. மீண்டும் இக்குற்றங்கள் அதிகரித்து, கடந்த ஆண்டில் இவ்வழக்குகள் 835 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2007-ல் பதிவான கற்பழிப்பு வழக்குகளில், குற்றவாளிகளில் 68 சதவிகிதத்தினர் கல்வியறிவில்லாதவர்கள் என்பதும், 24 சதவிகிதத்தினர் பத்தாம் வகுப்பு வரை கற்றவர்கள் என்பதும் தெரியவருகிறது.

மேலும், 80 சதவிகிதத்தினர் பொருளாதாரத்தில் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் என்பதும் போலீசாரின் ஆய்வறிக்கை மூலம் தெரியவருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாநிலங்களவையில் 5 வது நாளாக டி.ஆர். பாலு விவகாரம்
நான் போராளி அல்ல : அருந்ததி ராய்
டி.ஆர். பாலுவுக்கு எதிராக குறி வைக்கிறது பா.ஜனதா
' 7 ஆ‌ண்டுக‌ளி‌ல் ‌வி‌ண்வெ‌ளி‌க்கு ம‌‌‌னித‌னை அனு‌ப்பு‌‌ம்‌ ‌இஸ்ரோ'
ல‌‌‌‌ஷ்க‌ர் தீவிரவாத இயக்க தலைவன் சு‌ட்டு‌க் கொலை
கர்நாடக தேர்தல் ஏற்பாடு : தேர்தல் கமிஷன் இன்று ஆய்வு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace