|
| 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றம் பாராட்டு |
| புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 28 ஏப்ரல் 2008 ( 14:05 IST ) | |
பத்து செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.- சி9 ராக்கெட் இன்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக 'இஸ்ரோ' விஞ்ஞானிகளுக்கு நாடாளுமன்றத்தில் இன்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் சவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. - சி9 ராக்கெட் இன்று காலை 9.23 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
இதில், இந்தியாவின் 2 செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட 10 செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன.ஏனைய 8 செயற்கைகோள்களை கனடா மற்றும் ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் தயாரித்துள்ளன.
இது 'இஸ்ரோ' வின் சாதனை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்நிலையில், 'இஸ்ரோ'வின் இந்த சாதனைக்காக மக்களவையில் இன்று அதன் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிக்கபட்டது.
இது தொடர்பாக பாராட்டு தெரிவித்து பேசிய மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, 'இஸ்ரோ' வின் இந்த சாதனை குறித்து தாம் மிகவும் பெருமிதம் கொள்வதாகவும், அந்த சாதனையை நிகழ்த்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகளுக்கு தமது பாராட்டை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சாதனையில் இது ஒரு மைல் கல் என்றும் கூறினார்
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|