|
| டெல்லியில் சீனத் தூதரகம் முற்றுகை |
| புதுடெல்லி(ஏஜென்சி), புதன்கிழமை, 16 ஏப்ரல் 2008 ( 15:51 IST ) | |
ஒலிம்பிக் ஜோதி தொடரோட்டத்திற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் இன்று டெல்லியில் உள்ள சீனத் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.
டெல்லியில் சீனத் தூதரகம் அமைந்துள்ள சாணக்கியபுரி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் பெண்கள் உள்பட நூற்றுக்கும் அதிகமான திபெத்தியர்கள் திரண்டனர்.
சீன எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியபடியே , அவர்கள் சீன அதிபர் ஜிண்டாவோ உள்ளிட்ட சீனத் தலைவர்களுக்கு எதிராக முழக்கமிட்டபடி சீனத் தூதரகக் கட்டடத்திற்குள்ளே நுழைய முயன்றனர்.
முன்னதாக, அப்பகுதியில் பாதுகாப்பிற்குக் குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் திபெத்தியர்களை தூதரக் கட்டடத்திற்குள் நுழைய விடாமல் தடுக்கும் வண்ணம் பாதுகாப்பு வளையங்களை அமைத்திருந்தனர்.
இந்தப் பாதுகாப்பு வளையங்களை திபெத்தியர்கள் உடைக்க முயன்றதால் பாதுகாப்புப் படையினருக்கும் திபெத்தியர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது.
இதையடுத்து சீனத் தூதரகத்திற்குள் நுழைய முயன்ற திபெத்தியர்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய... |
| |
|
|
|
|
 | | WD |
| | | கண்ணும் கண்ணும் | | ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|