யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
புதுடெல்லி(ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஏப்ரல் 2008   ( 16:45 IST )
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளை மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு தேர்தல் கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கந்தசாமி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் , கடந்த 2004 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளான பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு முறையே 138 மற்றும் 142 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

இந்த போக்கை நீடிக்க அனுமதித்தால் , உள்ளூர் நலன்களில் அக்கறை கொண்டுள்ள மாநில கட்சிகள் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் மட்டுமே பொதுத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் , இது குறித்து ஆறு வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது பயனற்றது'
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத் தொடர் துவங்கியது
பார்லி. நாளை கூடுகிறது : அனல் கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
ராகுல் காந்தி பிரதமராக அர்ஜூன் சிங் ஆதரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: கருணை உள்ளமும், கள்ளம் கபடம் இல்லாமல் உள்ளதையும், நல்லதையும் பேசும் குணமும் உடைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
கண்ணும் கண்ணும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாத காதலர்கள், திடீரென உருவாகும் அண்ணன்-தங்கை உறவில் சிக்கி...
வெ‌ள்‌ளி‌த்‌திரை
வ‌ம்பு‌ச்ச‌ண்ட
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்...
மேலும் படிக்க|மேலும்...