|
| மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிராக மீண்டும் தாக்குதல் |
| மும்பை (ஏஜென்சி), திங்கள்கிழமை, 24 மார்ச் 2008 ( 12:10 IST ) | |
மும்பையில் வட இந்தியர்களுக்கு எதிராக ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சாந்தா குரூஸ் அருகே உள்ள கோக்லிவாடா பகுதியில் நேற்றிரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளானவர்களிடம் அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என கேட்ட ராஜ் தாக்கரே ஆதரவாளர்கள் ,அவர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்ததும் , அவர்களை சரமாரியாக அடித்து, மூங்கில் கம்பால் கடுமையாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து , தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராஜ் தாக்கரேவின் மகாராஷ்ட்ரா நவ நிர்மாண் கட்சியின் பேரணி நாளை நடைபெற உள்ள நிலையில், இத்தாக்குதல் நடந்திருப்பது மும்பையிலுள்ள வட இந்தியர்களிடையே மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | வெள்ளித்திரை | | திரையுலகில் நடக்கும் மோசடிகள் மற்றும் சோகங்களை கதை கருவாக தேர்வு செய்ததற்காகவே பிரகாஷ் ராஜூக்கும்... |
|
| |
|
|
|
|
|
| சிகிச்சைகள் - துரித உணவு காலத்தில் அஜீரணக் கோளாறு என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, இளைஞர்... |
| |
|
|
|
|
|
|
|