|
| ராஜ்நாத் சிங் விமானத்தில் கோளாறு ; அவசரமாக தரையிறக்கம் |
| போபால் (ஏஜென்சி), சனிக்கிழமை, 15 மார்ச் 2008 ( 11:15 IST ) | |
பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் சென்ற விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக , அந்த விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
மத்தியபிரதேச மாநிலம் போபால் விமான நிலையத்திலிருந்து சாகர் செல்லும் விமானத்தில் ராஜ்நாத் சிங் மற்றும் இதர பயணிகள் அமர்ந்திருந்தனர்.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே , விமானத்தின் சக்கரங்கள் திறக்காமல் இருப்பதாக விமானிக்கு தெரியவந்தது.
இதனையடுத்து அந்த விமானத்தை போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்தில் விமான அவசரமாக தரையிறக்கினார்.
விமானம் தரை இறக்கப்பட்ட பின்னரே விமான சக்கரம் திறப்பதில் கோளாறு ஏதுமில்லை என்பதும் , அதனைக் காட்டும் இண்டிகேட்டர்தான் சரியாக வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.
இத்தகவலை போபால் போலீஸ் ஐஜி ஷைலேந்திர ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :உங்களை எதிரிப்போல நினைத்தவரெல்லாம் இனி நட்புறவாடுவார்கள். நீண்ட நாளாக போக நினைத்த... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தூண்டில் | | தன்னைக் காதலித்துவிட்டு வேறொருத்தியை மணக்கும் காதலனை பழிவாங்கும் காதலியின் கதையே 'தூண்டில்'... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'என்னதான் செய்தாலும் உடல் சோர்வு மட்டும் போகவில்லையே' என்று வருந்துவோர் பலர்... |
| |
|
|
|
|
|
|
|