|
| மே.வ.கம்யூனிஸ்ட் தலைவர் சுட்டுக்கொலை |
| புருலியா (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 16:14 IST ) | |
மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் உள்ள பேஸ்ரா கிராமத்தில், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோர் மேற்கு வங்க மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரை சுட்டுக் கொன்றனர்.
நேற்று நள்ளிரவு 10 பேர் கொண்ட மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் என் சந்தேகிக்கப்படும் கும்பல் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் பலன்குமார் வீட்டை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவரது வீட்டு கதவை தட்டியுள்ளனர். சத்தம் கேட்டு வெளியில் வந்த அவரை தீவிரவாதிகள் தாக்கி ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் அவர் பலியானார். பின்னர் அந்த தீவிரவாதிகள் ஜார்க்கண்ட் மாநில எல்லைக்கு தப்பி ஓடிவிட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்குள்ள பாலராம்புர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 6 மணி நேர பொது அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர்.இதனால் ஜார்க்கண்ட் மாநில எல்லைப்பகுதி மூடப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 2007-ல் தமிழக பத்திரிகைகளால் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த அரசியல்வாதிகளில் ஒருவரான... |
| |
|
|
|
|
 | | FE |
| | | மிருகம் | | மனித வடிவில் உலவும் ஒரு மிருகத்தின் கதை!
இச்சைக்கு இசையாத இளம் பெண்களை, வன்செயல்களுடன் புசிக்கும்... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - பொலி மருந்து, மாத்திரைகளால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் என்பதை அனைவரும் அறிவர். சில நேரங்களில் உயிருக்கும்... |
| |
|
|
|
|
|
|
|