|
| தொழிலதிபர் அலிஸ்டருக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட் மறுப்பு |
| மும்பை (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007 ( 13:27 IST ) | |
மும்பையில் 7 பேரை காரை ஏற்றி கொன்ற வழக்கில், தொழிலதிபர் அலிஸ்டர் பெரியிராவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது ஜாமீன் மனுவை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
கடந்த 2006-ம் ஆண்டின் நவம்பர் 12-ம் தேதியில், கட்டடத் தொழிலாளர்கள் மீது அலிஸ்டர் ஓட்டிச் சென்ற கார் ஏறியதில், 7 பேர் பலியாயினர்; 8 பேர் காயமடைந்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த செசன்ஸ் கோர்ட், அலிஸ்டருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து, இவ்வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது.
இந்நிலையில், இவ்வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுவதந்தர் குமார் மற்றும் நீதிபதி ரஜானா தேசாய் ஆகியோர் கொண்ட பெஞ்ச், அலிஸ்டருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
இதைத்தொடர்ந்து, அலிஸ்டரின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள், அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்தனர்.
முன்னதாக, மும்பை காவல்துறையினரிடம் சரணடைந்த அலிஸ்டர், ஆர்தர் சாலை சிறையில் அடைக்கப்பட்டார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|