|
| புக்கர் பரிசு : பரிந்துரைப் பட்டியலில் இந்திய எழுத்தாளர் |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 செப்டம்பர் 2007 ( 11:56 IST ) | |
பிரிட்டனின் நடப்பாண்டுக்கான புக்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில், இந்திய நாவலாசிரியர் இந்திர சின்ஹா இடம்பெற்றுள்ளார்.
1984-ல் நிகழ்ந்த போபால் விஷ வாயுக் கசிவையும், அதைத்தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகளையும் மையமாக வைத்து எழுதப்பட்ட 'அனிமல்ஸ் பீப்புள்' என்ற நாவலுக்காக, இந்த விருதுக்கு சின்ஹாவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விருதுக்கு, இந்தியாவின் இந்திர சின்ஹாவுடன், வெவ்வெறு நாடுகளைச் சேர்ந்த 5 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆறு பேரில், பரிசு பெறப்போகும் எழுத்தாளரின் பெயர், வரும் அக்டோபர் 16-ம் தேதியன்றி அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டுக்கான புக்கர் பரிசை, 'இன்ஹெரிடன்ஸ் ஆஃப் லாஸ்' என்ற நாவலுக்காக இந்தியாவின் கிரண் தேசாய் என்ற நாவலாசிரியர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சிறப்பு பலன்கள் - 'ராத்', 'ரங்கீலா', 'சத்யா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களைத் தந்த இவர், 'ஷோலே' படத்தை 'ஆக்' ஆக மாற்றி, முந்தைய... |
| |
|
|
|
|
 | | FE |
| | | உற்சாகம் | | நட்பு, காதலாக மலரும் கதை. இத்தகைய வாழையடி வாழையான உற்சாகமானக் கதையில், புதிய வகையிலான இடையூறு... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - 'வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டுப் போகும்' என்ற பழமொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இதனை ஏற்றுக்கொள்ளாத... |
| |
|
|
|
|
|
|
|