|
| அரசுக்கு ஆதரவு இல்லை : பரதன் |
| புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 17 ஆகஸ்டு 2007 ( 09:06 IST ) | |
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என நாங்கள் தீர்மானித்து விட்டோம்,என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் ஏ.பி.பரதன் தெரிவித்தார்.
டெல்லியில் நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த பரதன் கூறியதாவது:
குறைந்த பட்ச பொது செயல் திட்டத்தின் கீழ் இந்த அரசுக்கு நாங்கள் ஆதரவளித்து வந்தோம்.
ஆனால், குறைந்த பட்ச் பொது செயல் திட்டத்தில் இருந்து அரசு விலகி விட்டது. இதனை,நாங்கள் பலமுறை சுட்டிக்காட்டியும் அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.
எனவே, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வது என முடிவு செய்து விட்டோம்.
இப்போதே வாபஸ் பெறுவதா? இல்லை சிறிது காலம் கழித்து விலக்கிக் கொள்ளலாமா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை.
அணுசக்தி உடன்பாட்டை செயல்படுத்துவது இல்லை, என அரசு முடிவெடுத்தால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்.
இவ்வாறு பரதன் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| இதிகாசங்கள் & கட்டுரைகள் - தாய், தந்தையர் என்பவர் யார் என்பதையும், அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடைமைகளையும் சிறப்பாக எடுத்துரைக்கிறது... |
| |
|
|
|
|
 | | FE |
| | | தொட்டால் பூ மலரும் | | பிரம்மாண்டமான காட்சிகள், யுவன் சங்கர் ராஜாவின் இசை, பாலிவுட் நடிகைகளைப் போன்ற தோற்றத்துடன் கூடிய... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - முகத்தில் கரும்புள்ளியா..? கவலை வேண்டாம், அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இதோ ஒரு சூப்பர் டிப்ஸ்... |
| |
|
|
|
|
|
|
|