|
| இந்தோனேஷியாவில் விமான விபத்து: பலர் பலி? |
| ஜகார்த்தா (ஏஜென்சி), புதன்கிழமை, 20 மே 2009 ( 11:06 IST ) | |
இந்தோனேஷிய ராணுவத்திற்கு சொந்தமான விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 112 பேரில் பலர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதுதொடர்பாக இந்தோனேஷிய விமானப் படையின் பேச்சாளர் பம்பாங் சுலிஸ்டியோ பேசுகையில், விமானப் படைக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் விமானம், 112 பயணிகளுடன் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஜாவா மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள விமானப்படை தளத்திற்கு அருகே விபத்திற்கு உள்ளானதாகக் கூறினார்.
வயல்வெளியில் விழுந்து விபத்திற்குள்ளாவதற்கு முன்பாக காப்லக் கிராமத்தின் 4 வீடுகளை அந்த விமானம் சேதப்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 12க்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என்றும் பம்பாங் கூறியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - இலங்கையில் வாழும் தமிழர்கள் உரிமைகளை காப்பாற்றவும், அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கவும், தாமதமின்றி மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|