|
| விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக வென்றுவிட்டோம் : சரத் பொன்சேகா |
| கொழும்பு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 18 மே 2009 ( 16:33 IST ) | |
தமிழீழ விடுதலைப் புலிகளை ராணுவ ரீதியாக இலங்கைப் படைகள் வென்றுவிட்டதாக அந்நாட்டின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இலங்கை பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது என்று கூறியுள்ள சரத் பொன்சேகா, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தியை உறுதிப்படுத்தவில்லை.
இதேபோல், பிரபாகரனும், அவருடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் கொல்லப்பட்டதாக வெளியிட்ட செய்தியும் இலங்கை ராணுவ இணையத் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், போரில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாகவும், அவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறியுள்ளதாக இலங்கை ராணுவத்தின் இணையத் தளம் கூறியுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஆந்திர மாநிலத்தில் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|