|
| இலங்கையில் போரை நிறுத்த அமெரிக்கா, இங்கிலாந்து வலியுறுத்தல் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), புதன்கிழமை, 13 மே 2009 ( 15:19 IST ) | |
இலங்கையில் போர்ப்பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்களின் நலன் கருதி இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் போரை நிறுத்திவிட்டு, மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என அமெரிக்காவும், இங்கிலாந்து அரசும் வலியுறுத்தியுள்ளன.
இங்கிலாந்து அயலுறவு செயலர் டேவிட் மில்லிபாண்ட், அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோர் வாஷிங்டனில் வெளியிட்ட கூட்டறிக்கையில், இலங்கையில் இரு தரப்பினரும் போரை நிறுத்திவிட்டு, பாதுகாப்பு வளையப் பகுதியில் சிக்கியுள்ள பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மையின மக்களுக்கு அர்த்தமுள்ள வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற - இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான - அரசியல் தீர்வை சிறிலங்க அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, போர்ப் பகுதியில் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற அனுமதிக்க வேண்டும். அதேபோல் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று கடந்த ஏப்ரல் 27 ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசு முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போர்ப் பகுதியில் காயமடைந்துள்ளவர்களுக்கு உதவுவதற்காகவும், அங்குள்ளவர்களை பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றவும், ஐ.நா.வின் மனிதாபிமானக் குழுவை சிறிலங்க அரசு போர்ப் பகுதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - காங்கிரஸ் கட்சியை தீண்டத்தகாத கட்சியாக இடதுசாரிகள் கருதவில்லை என்று மேற்கு வங்க முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா கூறியுள்ளார்... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நலம் காக்க - சுட்டெரிக்கும் கோடையில் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் தர்ப்பூசணிதான்... |
| |
|
|
|
|
|
|