|
| ஜர்தாரியுடன் கருத்து வேறுபாடு இல்லை : கிலானி |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), 9 ஜனவரி 2009 ( 18:52 IST ) | |
பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரியுடன் தமக்கு கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று பிரதமர் கிலானி கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அஜ்மல் கஸாப் தங்கள் நாட்டைச் சேர்ந்தவனல்ல பாகிஸ்தான் மறுத்து வந்த நிலையில், அந்நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் மகமூத் அலி துரானி அஜ்மல் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்தான் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒப்புக்கொண்டார்.
இது பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் மத்தியில் கடும் அவப்பெயரை ஏற்படுத்தியதோடு, தர்மசங்கடமான நிலையையும் உருவாக்கியது.
இதனால் பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மகமூத் அலியை பிரதமர் கிலானி நீக்கினார். கிலானியின் இந்த நடவடிக்கை அதிபர் ஜர்தாரிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கிலானியிடம் இது குறித்து கேட்டபோது, அதனை மறுத்தார்.இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏதுமில்லை என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து துரானி நீக்கப்பட்டிருப்பது தேச நலன் கருது எடுத்த முடிவு என்றும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தமிழகம் - தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 32-வது புத்தகக் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - கடினமான உழைப்பு, கால மாற்றம் ஆகியவை காரணமாக உடலில் உஷ்ணம் அதிகரிப்பது வழக்கம்.உடலில் உஷ்ணம் தேங்குவதால், உடல் பலகீனமடையும்... |
| |
|
|
|
|
|
|
|