|
| வங்கதேசத்தில் ஹசீனா அரசு பதவியேற்றது |
| டாக்கா (ஏஜென்சி), புதன்கிழமை, 7 ஜனவரி 2009 ( 10:40 IST ) | |
வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான புதிய அரசு நேற்று பதவியேற்றுக் கொண்டது.
தலைநகர் டாக்காவில் உள்ள அதிபர் மாளிகையில் நேற்று மாலை நடந்த கோலாகலமான விழாவில், வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்றுக் கொண்டார். அதிபர் இயாஜுதீன் அகமது, அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு உறுதிமொழியையும் செய்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து 31 பேர் கொண்ட அமைச்சரவையும் பதவி ஏற்றுக் கொண்டது. இதில் 23 பேர் கேபினட் அந்தஸ்து உடையவர்கள். எஞ்சியவர்கள் இணையமைச்சர்கள் ஆவர்.
அண்மையில் வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவான நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தனியார் வானொலி, தொலைக்காட்சி நிலையங்களை ஆயுதமேந்திய கும்பல் தாக்கிச் சேதப்படுத்தியது... |
| |
|
|
|
|
 | | | மகேஷ் சரண்யா மற்றும் பலர் | | குடும்பப் பின்னணியில் ஒரு நெகிழ்ச்சியான காதல் கதை.
கூட்டுக் குடும்பத்தின் பாசக்கார இளைஞர் ஷக்தி. படிப்புக்காக பட்டணம் செல்லும் ஷக்தி, தங்கை சரண்யாவுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயமானதால் ஊருக்கு வருகிறார்.... |
|
| |
|
|
|
|
|
| தகவல்கள் - பொதுஇடங்களில் சிகரெட் பிடிக்க விதிக்கப்பட்ட தடையால், மாரடைப்பால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|