|
| பாக்., இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் |
| ஜகார்த்தா/ பெஷாவர் (ஏஜென்சி), 4 ஜனவரி 2009 ( 14:19 IST ) | |
இந்தோனேஷியா, பாகிஸ்தானின் வட கிழக்குப் பகுதிகளில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேஷியாவில் உள்ள பப்புவா தீவில் இருக்கும் மனோக்வாரி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உண்டானது.
பூமிக்கடியில் சுமார் 35 அடி அழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.6 ஆகப் பதிவானது. இதனால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் இறந்ததாகவும், 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.
இதேபோல் வட கிழக்குப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் எல்லைப் புறங்களில் 5.9 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக தென்கிழக்கு ஜப்பானில் சிறிய அளவில் சுனாமி ஏற்பட்டதாக, தகவல்கள் கூறுகின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| சர்வதேசம் - ஆட்களே இல்லாத கிளிநொச்சி நகரை இலங்கை ராணுவம் பிடித்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்... |
| |
|
|
|
|
 | | | சிலம்பாட்டம் | | ஒரு சிம்பு ஆட்டம் போட்டாலே தாங்காது. இதில் இரட்டை சிம்புவா என்று நினைத்து உள்ளே போனால், அக்ரஹாரத்து அம்பியாக கடவுளை நினைத்து கண்மூடி உருகுகிறார் சிம்பு. அவரது குரலை கேட்டு மதம் பிடித்த கோயில் யானையே அடங்கி நிற்கிறது.... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - குளிப்பதற்கு வழக்கமாக பயன்படுத்தும் தண்ணீரைவிட ஒரே ஒருநாள் வேறு தண்ணீர் பயன்படுத்தினால் போதும். சிலருக்கு உடனே ஜலதோஷம் பிடித்து, இருமலில் கொண்டுபோய் விட்டு விடும்.... |
| |
|
|
|
|
|
|
|