|
| பாகிஸ்தானில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் |
| இஸ்லாமாபாத் (ஏஜென்சி), திங்கள்கிழமை, 1 டிசம்பர் 2008 ( 13:32 IST ) | |
மும்பை தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் உறவில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், நாளை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பாகிஸ்தான் அரசு ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஏற்பாடு செய்துள்ள இந்த கூட்டத்தில், தவறாமல் கலந்து கொள்ளும்படி பிரதான அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும், அத்தகைய சூழ்நிலையில் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் எனத் தெரிகிறது.
உலகத் தலைவர்களிடம் உதவி கேட்கிறார் ஜர்தாரி:
இதற்கிடையே இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை தணிக்க உதவும்படி உலகத் தலைவர்கள் பலருக்கும் பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அன்சாரி, பிரெஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசி, பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் முல்பாண்ட் உள்ளிட்ட தலைவர்களை தொடர்பு கொண்டு, மும்பைத் தாக்குதலுக்குப் பின் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகளை அவர் விளக்கியதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|