யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
பயங்கரவாத ஒழிப்பு : மன்மோகனிடம் ஒபாமா உறுதி
வாஷிங்டன் / புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008   ( 18:12 IST )
பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌ப்ப‌தி‌ல் இ‌ந்‌தியாவோடு அமெ‌ரி‌க்கா இணை‌ந்து ‌நி‌ற்கு‌ம் எ‌ன்று அந்நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராக் ஒபாமா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ன்று ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்குட‌ன் தொலைபே‌சி‌யி‌ல் தொடர்பு கொண்டு பே‌சிய பரா‌க் ஒபாமா,மு‌ம்பை‌யி‌ல் பய‌ங்கரவா‌திக‌ள் நட‌த்‌திய தா‌க்குத‌‌லி‌ல் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ள அனைவ‌ரி‌ன் குடு‌ம்ப‌ங்களு‌க்கு‌ம் தனது ஆ‌ழ்‌‌ந்த இர‌ங்கலை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொண்டார்.

அப்போது அடியோடு வெறு‌க்க‌த்த‌க்க‌ கொ‌ள்கையான பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌ப்ப‌தி‌ல் இ‌ந்‌தியாவோடு அமெ‌ரி‌க்கா இணை‌ந்து ‌நி‌ற்கு‌ம் எ‌ன்று உறுதியளித்தார்.

மு‌ன்னதாக அவ‌ர் ‌விடு‌த்து அ‌றி‌க்கை‌யி‌ல்," அ‌ப்பா‌வி ம‌க்களை‌க் கு‌றிவை‌த்து‌க் கொ‌ல்லு‌ம் பய‌ங்கரவா‌திகளா‌ல் இ‌ந்‌தியா‌‌வி‌ன் ஜனநாயக‌த்தையோ, அவ‌ர்களை மு‌றியடி‌ப்பத‌ற்காக ஒ‌ன்றுப‌ட்டு ‌நி‌ற்கு‌ம் ச‌‌ர்வதேச‌த்தையோ மு‌றியடி‌க்க முடியாது.

பய‌ங்கரவாத‌த்தை மு‌றியடி‌‌ப்ப‌தி‌ல் இ‌ந்‌தியாவுட‌ன் அமெ‌ரி‌க்கா இணை‌ந்து ‌நி‌ற்க வே‌ண்டு‌ம். பய‌ங்கரவா‌திக‌ளி‌ன் தொட‌ர்புகளை அ‌ழி‌ப்ப‌தி‌லு‌ம், அவ‌ர்க‌ளி‌‌ன் வெறு‌க்க‌த்த‌க்க கொ‌ள்கைகளை தோ‌ல்‌வியுற‌ச் செ‌ய்வ‌திலு‌ம் எல்லா நாடுகளு‌ம் ம‌க்களு‌ம் உறு‌தியாக ‌நி‌ற்க வே‌ண்டு‌ம் .

ஒரு நேர‌த்‌தி‌ல் ஒரு அ‌திப‌ர்தா‌ன் இரு‌க்க வே‌ண்‌டு‌ம். இ‌ந்த சோகமான நேர‌த்‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு உதவுவ‌திலு‌ம், அமெ‌ரி‌க்க‌க் குடிம‌க்களை‌க் கா‌ப்ப‌திலு‌ம் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் ‌நி‌ர்வாக‌ம் எடு‌க்கு‌ம் நடவடி‌க்கைக‌ளு‌க்கு நா‌ங்க‌ள் முழுமையான ஆதரவை‌த் தருவோ‌ம்.

மு‌ம்பை‌ ‌நிலவர‌த்தை நா‌ன் முழுமையாக‌க் கவ‌னி‌த்து வரு‌கிறே‌ன், எனது அ‌திகா‌ரிக‌ள் உடனு‌க்குட‌ன் தகவ‌ல்களை‌ச் சேக‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.இ‌ந்‌திய‌த் தூத‌ர் ரோன‌ன் செ‌ன்னுட‌ன் நா‌ன் தொட‌ர்‌ந்து பே‌சி வரு‌கிறே‌ன் " எ‌ன்று அந்த அறிக்கையில் ஒபாமா கூ‌றியிருந்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மும்பை தாக்குதல் பின்னணியில் யார் ? : யு.எஸ் தகவல்
ஐஎ‌ஸ்ஐ தலைவ‌ரை இ‌ந்‌தியாவுக்கு அனுப்ப மறுக்கும் பாக்.!
மு‌ம்பை தா‌க்குத‌லி‌ல் தொட‌ர்பா?: பா‌க். மறு‌ப்பு!
மும்பை தாக்குதல்: உலக நாடுகள் கண்டனம்
மு‌ம்பை தா‌க்குத‌ல்: அமெ‌ரி‌க்கா கடு‌ம் க‌ண்டன‌ம்
' இல‌ங்கை‌யி‌ல் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்க‌ள் அதிகரிப்பு '
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...