|
| மும்பை தாக்குதல் பின்னணியில் யார் ? : யு.எஸ் தகவல் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), சனிக்கிழமை, 29 நவம்பர் 2008 ( 18:00 IST ) | |
மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு காஷ்மீரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவான லஷ்கர்- இ - தொய்பா அமைப்பு காரணமாக இருக்கலாம் என அமெரிக்கா தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாத ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்ததாக 'நியூயார்க் டைம்ஸ் ' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து உறுதியாகத் தெரியவில்லை என்ற போதிலும், இதுதொடர்பாக கடந்த 2 நாட்களாக சேகரித்த தகவல்களின்படி லஷ்கர்-இ - தொய்பா அல்லது ஜெய்ஷ்-ஈ-முகமது அமைப்பிற்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அந்த அதிகாரிகள் கூறியதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே மும்பை தாக்குதலுக்கு காரணமாகக் கூறப்படும் அமைப்புகளில் ஒன்றான லஷ்கர்- இ - தொய்பா இதனை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|