|
| மும்பை தாக்குதல்: அமெரிக்கா கடும் கண்டனம் |
| வாஷிங்டன் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008 ( 09:56 IST ) | |
மும்பையில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையின் பலவேறு பகுதிகளில் நேற்றிரவு தீவிரவாதிகள் நடத்திய தாகுக்தல்களில் உயர் போலீஸ் அதிகாரிகள் 7 பேர் உள்பட 80 பேர் பலியாகினர். 200 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தியா மட்டுமின்றி உலகையே உலுக்கியுள்ள இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை:
மும்பையில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். தாக்குதலில் பலியானோர் மற்றும் காயம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மற்றும் மும்பை மக்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த தொடர் தாக்குதல்களை சமாளிக்க இந்திய அதிகாரிகளுக்கு உதவ தாயாராக இருக்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|