|
| பிரபாகரன் உத்தரவு : பிறந்த நாள் விழா ரத்து |
| கிளிநொச்சி (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008 ( 17:34 IST ) | |
போரினால் ஈழ மக்கள் பெரிதும் துயரமடைந்துள்ளதால், தனது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் எதையும் நடத்த வேண்டாம் என பிரபாகரன் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் கடுமையான குண்டு வீச்சு தாக்குதலில் சிங்கள ராணுவம் ஈடுபட்டுள்ளதால், ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறி காடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.உணவு, இருக்க இடமின்றி தவித்து வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்களையும் அவர்களுக்கு கிடைக்கவிடாமல் சிங்கள ராணுவம் தடுத்து வருகிறது.
இந்நிலையில், புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை ஆண்டுதோறும் மாவீரர் தினமாக புலிகள் இயக்கத்தினரும், ஈழ மக்களும் கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில்,இன்று பிரபாகரனின் 54 ஆவது பிறந்த நாளாகும்.ஆனால் ஈழ மக்கள் படும் துயரம் மற்றும் சிங்கள ராணுவத்தினருடன் நடைபெற்று வரும் கடுமையான சண்டை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் வேண்டாம் என தனது இயக்கத்தினருக்கு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|