யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் சர்வதேசம்
சிட்டி வங்கிக்கு நஷ்டம் ஏன் ? சிஇஓ விளக்கம்
நியூயார்க் (ஏஜென்சி), புதன்கிழமை, 26 நவம்பர் 2008   ( 16:20 IST )
அமெரிக்காவின் பிரபல நிதி நிறுவனமான சிட்டி குழும வங்கி கடும் ழப்பை சந்தித்ததற்கு, அந்நிறுவனம் ரியல் எஸ்டேட் துறையில் அதிக அளவு முதலீடு செய்ததே காரணம் என்று அக்குழுமத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுள்ள விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.

பேட்டி ஒன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், சிட்டி ,குழுமத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு முந்தைய நிர்வாகமே காரணம் என்றார்.

எங்கே தவறு நிகழ்ந்ததோ அங்கே நாங்கள் மிகவும் ஆழமாக கவனம் செலுத்தப்போகிறோம் என்று அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக 306 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்து கடும் நெருக்கடிக்குள்ளான அமெரிக்காவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான சிட்டி குழுமத்தை காப்பாற்ற அந்நாட்டு ரிசர்வ் வங்கியாக திகழும் பெடரல் வங்கி, முதல்கட்டமாக 20 பில்லியன் டாலர்களை நிதியுதவி அளிக்க உள்ளதாக அறிவித்தது.

இதனையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது நியூயார்க் பங்குச் சந்தையில் சிட்டி குழுமத்தின் பங்கு ஒன்றின் விலை 3.77 டாலராக இருந்த நிலையில், நேற்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது அதன் மதிப்பு 6.08 டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பாங்காக்கில் கலவரம்: விமான நிலையம் மூடல்!
தாய்லாந்து கப்பலை மூழ்கடித்ததா இந்திய கடற்படை ?
மீண்டும் ஒரு கப்பலை கடத்தினர் சோமாலி கடற் கொள்ளையர்கள்
வெனிசுலா தேர்தல்: அதிபர் கட்சி அதிக இடங்களில் வெற்றி
பாகிஸ்தானில் 20 தீவிரவாதிகள் பலி
நேபாளப் பிரதமருடன் பிரணாப் ஆலோசனை
செய்திகள்
தேசியம் - 'நெய்யாறு தமிழகத்துக்கு சொந்தமானது அல்ல. இரு மாநிலங்களுக்கும் பொதுவானது என்று கூறுவதையும் ஏற்க முடியாது' என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
இன்டெர்நெட்டில் கலக்குவாரா விஷால்?
பாலிவுட்டைப் போலவே இணையதளத்தில் தங்களுக்கென ஒரு பிளாக் தொடங்குவதில் கோடம்பாக்கத்து நடிகர்- நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‌'மர்மயோகி' குறித்து தொடரும் மர்மங்கள்
வாரணம் ஆயிரத்தில் கத்தரி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...