|
| புலிகளின் விமான ஓடுதளத்தை கைப்பற்றியதாக ராணுவம் அறிவிப்பு |
| கொழும்பு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2008 ( 17:30 IST ) | |
கிளிநொச்சி அருகே உள்ள விடுதலைப் புலிகளின் விமான ஓடுதளம் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
கிளிநொச்சி அருகே உள்ள பரந்தன்-பூனேரி சாலையில் கைப்பற்றப்பட்ட இந்த விமான ஓடு தளம், நிவில் என்ற இடத்தில் உள்ளதாகவும், இதனை விடுதலைப் புலிகள் தங்களது சிறிய ரக விமானங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தனுக்கு 14 கி.மீ. மேற்கே நிலை கொண்டுள்ள இலங்கை ராணுவம் அந்தப் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - நாடாளுமன்றம் வரும் 10ம் தேதி கூடுகிறது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|