|
| இலங்கை: நிவாரணப் பொருட்கள் இன்று ஒப்படைப்பு! |
| கொழும்பு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 20 நவம்பர் 2008 ( 09:23 IST ) | |
இலங்கை போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழகத்திலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இன்று செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஏராளமான தமிழர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உதவுவதற்காக, தமிழகத்தில் இருந்து உணவு மற்றும் மருந்துகள் அடங்கிய 1,600 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கடந்த திங்கட்கிழமை வந்தது.
இந்திய தூதரக அதிகாரிகள், இந்த நிவாரண பொருட்களை இன்று செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கின்றனர். இதன் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|