|
| எமர்ஜென்சியை விலக்கிக் கொள்ள கலிதா ஜியா கெடு |
| டாக்கா (ஏஜென்சி), 18 நவம்பர் 2008 ( 11:40 IST ) | |
பங்காளதேஷில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலையை 48 மணி நேரத்திற்குள் விலக்கிக் கொண்டுவிட்டால் தமது கட்சி, அடுத்த மாதம் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பங்கெடுத்துக் கொள்ளும் என்று முன்னாள் பிரதமரும், பங்காளதேஷ் தேசியவாத கட்சியின் தலைவருமான கலீதா ஜியா தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற தமது கட்சி தலைமையிலான கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் மேற்கண்ட நிபந்தனையை வெளியிட்டார்.
தமது இந்த நிபந்தனை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் தேர்தல் தொடர்பாக ஏற்பட்டுள்ள தேக்க நிலைக்கு தேர்தல் ஆணையமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.
தேர்தலலில் நாங்கள் போட்டியிட விரும்புவதால் ஏற்கனவே ஏழு அம்ச கோரிக்கைகளை கைவிட்டுவிட்டோம்.
எனவே தேர்தலுக்கான சுமூகமான நிலைக்கேற்றவாறு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தி,தனது நல்லெண்ணத்தை அரசு வெளிப்படுத்துமென்று நாங்கள் நம்புகிறோம் என ஜியா மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| தேசியம் - ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், முதற்கட்டமாக 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.... |
| |
|
|
|
|
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|