|
| பாகிஸ்தானில் இரட்டை தற்கொலை தாக்குதல் : 19 பேர் பலி |
| கார் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 7 நவம்பர் 2008 ( 12:05 IST ) | |
வட மேற்கு பாகிஸ்தானில் நிகழ்ந்த இரட்டை தற்கொலை தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
பஜூர் மாவட்டம் கார் என்ற இடத்தில் தற்கொலை தீவிரவாதி ஒருவன், பழங்குடியினத்தவர்கள் கூடியிருந்த இடத்தில் தான் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர் ; 45 பேர் காயமடைந்தனர்.
அதேபோன்று ஸ்வாத் பள்ளத்தாக்கு அருகே உள்ள மிங்கோரா என்ற இடத்தில் துணை ராணுவப் படையினர் மீது, தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்து வெடிக்கச் செய்ததில், 2 பேர் கொல்லப்பட்டனர் ; 11 பேர் காயமடைந்தனர்.
இதனிடையே பஜூர் மாவட்டத்தின் மற்றொரு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 17 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - கடகம் : உடல் நலம் சீராகும். அரைகுறையாக பாதியிலேயே நின்ற காரியமெல்லாம் சுலபமாக... |
| |
|
|
|
|
 | | | ஏகன் | | தனது தம்பி பிரபுதேவாவை பார்த்து அண்ணன் ராஜூ சுந்தரம் சூடுபோட்டு கொண்டதன் விளைவே 'ஏகன்'.... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து... |
| |
|
|
|
|
|
|
|