|
| அணு ஒப்பந்தம்: 3 என்.எஸ்.ஜி. நாடுகளிடம் பேசுகிறார் மேனன் |
| வியன்னா (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008 ( 16:47 IST ) | |
இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் வைத்துக் கொள்வது குறித்து விவாதிப்பதற்கு, அணு எரிபொருள் வழங்கும் (என்.எஸ்.ஜி.) நாடுகளின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், ஜெர்மெனி உள்ளிட்ட மூன்று என்.எஸ்.ஜி. உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை, இந்திய வெளியுறவு செயலர் சிவ சங்கர் மேனன் சந்திக்கவுள்ளார்.
டிரோய்கா (ஜெர்மெனி), தென் ஆப்பிரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்திப்பதற்கு, மேனன் இன்று வியன்னா வந்து சேர்ந்தார்.
அவருடன், இந்திய அணுசக்தி துறையின் இயக்குனர் ரவி குரோவரும், மூன்று உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
அப்போது, இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அவர்களிடம் மேனன் விரிவாக விளக்கமளிப்பார் எனத் தெரிகிறது.
இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்து முடிவெடுக்க, 45 என்.எஸ்.ஜி உறுப்பு நாடுகள் இரு நாட்களில் கூடவுள்ள நிலையில், மேனனின் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்தாகிறது.
மேலும், இந்தியாவுடன் அணுசக்தி வர்த்தகம் மேற்கொள்ள என்.எஸ்.ஜி. நாடுகள் ஒப்புக்கொண்டவுடன், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|