|
| ' பதவி விலகாவிட்டால் முஷாரப் மீது குற்றச்சாற்று பதிவு ' |
| லண்டன்(ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 17 ஆகஸ்டு 2008 ( 16:42 IST ) | |
அதிபர் பதவியில் இருந்து பர்வேஸ் முஷாரப் உடனடியாக பதவி விலகாவிட்டால், அவர் மீது பாகிஸ்தான் இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.
வரும் புதன் கிழமைக்குள் விலக வேண்டும் என்று கெடு விதித்து, பாகிஸ்தான் அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக லண்டனிலிருந்து வெளிவரும் ' தி சண்டே டைம்ஸ்' நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதியான முறையில் முஷாரப் தாமாக பதவியில் இருந்து விலகி சென்றால் அவர் மீது எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படாது என்று பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி உறுதி அளித்திருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் முஷாரப் பதவி விலக மறுத்தால், அவரை காப்பாற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபடாது என்றும் அஷ்பாக் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில்
அந்தஸ்து உயரும். கடினமான... |
| |
|
|
|
|
 | | | குசேலன் | | முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்... |
| |
|
|
|
|
|
|
|